திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

382

வாகனம் வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பிரியமாலி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கை ஆகஸ்ட் 11ஆம் திகதி ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, வழக்கு மீள அழைக்கப்படும் அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here