மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலுக்கு

241

பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here