பழைய கட்டிடங்களை நவீனப்படுத்த அரசின் புதிய தீர்மானம்

1385

புராதன கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை வழங்கவும் அவற்றை நவீனப்படுத்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோர்ஜியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் நினோ மக்விலாட்ஸே ஆகியோர் ஜோர்ஜிய முதலீட்டாளர்கள் குழுவுடன் நடத்திய கலந்துரையாடலில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் இன்று (05) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் புராதன கட்டிடங்களை முதலீட்டு வாய்ப்புகளுக்காக பொருத்தமான முறையில் பயன்படுத்துவது மற்றும் ஜோர்ஜிய முதலீட்டாளர்களுக்கு அந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பு “கஃபூர் கட்டிடம்” மற்றும் கொழும்பு “எய்ட்டி கிளப்” கட்டிடம் போன்ற பல இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கட்டடங்களின் வரலாற்று தொன்மைக்கு சேதம் ஏற்படாத வகையில் நவீனப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்.

இந்நாட்டில் உள்ள பெரும்பாலான புராதன கட்டிடங்கள் முறையான பராமரிப்பு இன்மையால் பாழடைந்து வருவதாகவும், அவற்றை நவீனமயமாக்கி முதலீடுகளுக்கு பயன்படுத்தினால் நாட்டுக்கு வருமானம் ஈட்ட முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பருவத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் மெதுவாகவே தீர்க்கப்பட்டு வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்திட்டங்களை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய மற்ற இடங்கள் குறித்தும் கண்டறிந்து, அதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள இவ்வாறான இடங்கள் குறித்த தகவல்களை பெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் அந்த இடங்களையும் இந்த வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி. பிரியசாந்த உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here