follow the truth

follow the truth

July, 15, 2025
Homeவிளையாட்டுஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம்

Published on

ஹம்பாந்தோட்டையில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி விதிகளுக்கும் அமைய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசத் தவறினால் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பில் முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி அறிவித்துள்ளது.

கள நடுவர்கள் நிதின் மேனன் மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல, மூன்றாவது நடுவர் மைக்கேல் கோஃப் மற்றும் நான்காவது நடுவர் லிண்டன் ஹன்னிபால் ஆகியோர் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செம்பியன் பட்டத்தை வென்றது செல்சி

FIFA கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற...

இலங்கை-பங்களாதேஷ் முதல் T20 போட்டி – விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல்...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று...