அமைச்சுப் பதவி பெற்ற SLFP நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து மத்திய குழுவில் ஏகமனதாக தீர்மானம்

706

அரசாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் தாம் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (05) பிற்பகல் கூடியுள்ளது.

எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வினைத்திறனாகவும் வேகமாகவும் முன்னோக்கிச் செல்வதாகவும் இந்த யுகத்திற்கு பொருத்தமான பிரதான அரசியல் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here