follow the truth

follow the truth

June, 27, 2025
Homeஉள்நாடுபுயல் காற்று - மீனவர்களுக்கு எச்சரிக்கை

புயல் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published on

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (6) நள்ளிரவில் படிப்படியாக புயலாக உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையில் வீசக்கூடும் எனவும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 75 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ளும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

இன்று (06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி

இன்று கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22...

இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் செய்தி

முஹர்ரம் 1447 இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய...

ஹப்புத்தளையில் புதிய சுற்றுலா வலயம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை

“இலங்கை தேயிலை (Ceylon Tea)” எனும் பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த இலங்கைக்கு...