follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

Published on

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்குக் காய்ச்சல் (Monkeypox) தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு தாயும் மகளும் குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

குறித்த குடும்பத்தின் தந்தையும் வெளி நாட்டில் குரங்குப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நாடு திரும்பியமை தெரிய வந்துள்ளது.

தாயும் மகளும் டுபாயில் இருந்து வந்தவர்கள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...