follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

Published on

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்குக் காய்ச்சல் (Monkeypox) தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு தாயும் மகளும் குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

குறித்த குடும்பத்தின் தந்தையும் வெளி நாட்டில் குரங்குப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நாடு திரும்பியமை தெரிய வந்துள்ளது.

தாயும் மகளும் டுபாயில் இருந்து வந்தவர்கள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...