follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மெண்டரின் ஆரஞ்சுகளை வளர்க்க தீர்மானம்

மெண்டரின் ஆரஞ்சுகளை வளர்க்க தீர்மானம்

Published on

இலங்கை மக்களின் அதிக தேவையுடைய இறக்குமதி செய்யப்பட்ட மெண்டரின் ஆரஞ்சு இனத்தை (Mandarin orange) பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள்மெண்டரின் ஆரஞ்சு பயிர்ச்செய்கைக்கு உகந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை புதிய பயிர்ச்செய்கை திட்டங்களின் விஸ்தரிப்புக்கு பயன்படுத்துவது தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.

அங்கு கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் செவ்வாழை பயிர்ச்செய்கை வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...