கொழும்பு – அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் பயணித்த பேரூந்தும் லொறியும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.