follow the truth

follow the truth

August, 22, 2025
HomeTOP1பல்கலைக்கழக பகிடிவதை - 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

பல்கலைக்கழக பகிடிவதை – 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Published on

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேரை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“புதிய மாணவர் குழுவிற்கு அழுகிய உணவளித்து மனிதாபிமானமற்ற சித்திரவதை” சம்பவம் காரணமாக இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ பீடத்திற்குள் நுழைந்த புதிய மாணவர்கள் குழுவினை இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அக்பர் விடுதிக்கு அழைத்துச் சென்று, கெட்டுப்போன மற்றும் அழுகிய உணவினை சாப்பிட கொடுத்து, கடுமையாக திட்டி, தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வகுப்புத் தடை தற்காலிகமானது என்றும், முறையான விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

கடந்த 10ம் திகதி முதல் இந்த வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...