follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை

உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை

Published on

ஒரு வருடத்தில் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.

யானை – மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, இலங்கை வரலாற்றில் யானை – மனித மோதலினால் அதிகளவான யானைகள் மற்றும் மனிதர்களின் உயிர்கள் பலியாகிய ஆண்டாக 2022 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

அதன்படி, 2022ம் ஆண்டு இலங்கையில் பலியாகிய யானைகளின் எண்ணிக்கை 439 மற்றும் மனித உயிரிழப்புக்கள் 148 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த வருடம் ஜூன் 2ம் திகதி வரைக்கும் யானைகளது மரணம் 193 ஆகவும் மனித உயிரிழப்புக்கள் 63 ஆகவும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானைகள் தொல்லையால், சிலர் இரவு நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் மரங்களில் மிகவும் ஆபத்தான முறையில் தங்குகின்றனர்.

யானை – மனித மோதலை தீர்க்க 2023 ஆண்டு யானைகளுக்கான வேலிக்கு 350 மில்லியன் ரூபாவும், யானை வெடிகளுக்காக 180 மில்லியன் ரூபாவும் உயிர் உடமை நட்டஈடாக 120 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

யானை – மனித மோதலை தீர்க்க 64 ஆண்டுகளாக பலகோடி ரூபாய் செலவழித்தும் இதுவரை மனிதர்கள் மற்றும் யானைகள் உயிரிழப்பைக் குறைக்க முடியாமல் போனது ஏன் என்பது புதிராகவே உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...