follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1இதுவரை 43,752 டெங்கு நோயாளர்கள் பதிவு

இதுவரை 43,752 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

இம்மாதம் கடந்த 7 நாட்களில் 334 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 43,752 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 67 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

கண்டி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் டெங்கு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சிறுவர்கள் மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மழையுடன் இந்த நிலை அதிகரிக்கலாம் எனவும் பாடசாலை செல்லும் மாணவர்களில் கணிசமான வீதமானவர்கள் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....