பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு

323

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாரிஸில் நடைபெறவுள்ளது.

உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்ற ஜனாதிபதி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here