follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ரணில் - மோடி சந்திப்பதற்கு முன் வடக்கிலிருந்து மோடிக்கு ஒரு பிரேரணை

ரணில் – மோடி சந்திப்பதற்கு முன் வடக்கிலிருந்து மோடிக்கு ஒரு பிரேரணை

Published on

இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 13ம் திகதி வடபகுதி மீனவர் சங்கங்கள் இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர்.

இந்த மனுவை அதன் தலைவர் ஏ. அன்னராசா அதனை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதால் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்வொன்றை எட்டுமாறு வடமாகாண மீனவர் சங்கங்கள் இணைந்து இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மீனவர்கள் வட கடலில் வலுக்கட்டாயமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், சீன மீன்பிடி நிறுவனங்கள் இலங்கையின் தென்பகுதியில் உள்ள மீனவ சங்கங்களுக்குள் ஊடுருவி சட்டவிரோதமான முறையில் மீன்களை கொன்று குவித்ததால் வடபகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடி இறுதி முடிவுக்கு வர வேண்டும் என வடக்கின் மீனவ சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...