follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ரணில் - மோடி சந்திப்பதற்கு முன் வடக்கிலிருந்து மோடிக்கு ஒரு பிரேரணை

ரணில் – மோடி சந்திப்பதற்கு முன் வடக்கிலிருந்து மோடிக்கு ஒரு பிரேரணை

Published on

இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 13ம் திகதி வடபகுதி மீனவர் சங்கங்கள் இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர்.

இந்த மனுவை அதன் தலைவர் ஏ. அன்னராசா அதனை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதால் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்வொன்றை எட்டுமாறு வடமாகாண மீனவர் சங்கங்கள் இணைந்து இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மீனவர்கள் வட கடலில் வலுக்கட்டாயமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், சீன மீன்பிடி நிறுவனங்கள் இலங்கையின் தென்பகுதியில் உள்ள மீனவ சங்கங்களுக்குள் ஊடுருவி சட்டவிரோதமான முறையில் மீன்களை கொன்று குவித்ததால் வடபகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடி இறுதி முடிவுக்கு வர வேண்டும் என வடக்கின் மீனவ சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...