follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"ஜனாதிபதியை தொடர்பு கொள்ள ஈஸி பிரதமரை தொடர்பு கொள்வதில் சிரமம்"

“ஜனாதிபதியை தொடர்பு கொள்ள ஈஸி பிரதமரை தொடர்பு கொள்வதில் சிரமம்”

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக கூறியுள்ள பசில் ராஜபக்ஷ, அந்த ஜனாதிபதிகள் எவருக்கும் இல்லாத திறமையான பணியாளர்கள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரை பசில் ராஜபக்ஷ வெகுவாகப் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பணிப்புரை தொடர்பில் பொஹொட்டு கட்சியின் சில தலைமைகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆட்சேபனைகளை தெரிவித்தாலும், ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் பணிக்கு அது எவையும் தடையாக அமையாது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பசில் ராஜபக்ஷ இந்த விடயங்களை தெரிவித்ததுடன், எந்த நேரத்திலும் ஜனாதிபதியை தொடர்பு கொள்ள முடியும் எனினும் பிரதமர் தினேஷ் குணவர்தனவை தொடர்பு கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...