follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"ஜனாதிபதியை தொடர்பு கொள்ள ஈஸி பிரதமரை தொடர்பு கொள்வதில் சிரமம்"

“ஜனாதிபதியை தொடர்பு கொள்ள ஈஸி பிரதமரை தொடர்பு கொள்வதில் சிரமம்”

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக கூறியுள்ள பசில் ராஜபக்ஷ, அந்த ஜனாதிபதிகள் எவருக்கும் இல்லாத திறமையான பணியாளர்கள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரை பசில் ராஜபக்ஷ வெகுவாகப் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பணிப்புரை தொடர்பில் பொஹொட்டு கட்சியின் சில தலைமைகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆட்சேபனைகளை தெரிவித்தாலும், ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் பணிக்கு அது எவையும் தடையாக அமையாது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பசில் ராஜபக்ஷ இந்த விடயங்களை தெரிவித்ததுடன், எந்த நேரத்திலும் ஜனாதிபதியை தொடர்பு கொள்ள முடியும் எனினும் பிரதமர் தினேஷ் குணவர்தனவை தொடர்பு கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...