follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அலி சப்ரியின் சம்பவம் - முழுமையான அறிக்கை வழங்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்பு

அலி சப்ரியின் சம்பவம் – முழுமையான அறிக்கை வழங்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்பு

Published on

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில், அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த உறுப்பினர் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த 23ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் ஏழரை கோடி பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டார்.

பின்னர் 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...