follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"ஜனாதிபதியுடன் இணைந்து மக்களுக்கு தாம் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை"

“ஜனாதிபதியுடன் இணைந்து மக்களுக்கு தாம் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை”

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரபுக்களுக்கு சலுகைகளை வழங்கி நாட்டை வங்குரோத்து செய்ததாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செய்கின்றார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் பொது மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு சிறந்த உதாரணம் மின்சாரக் கட்டணமே எனவும் தெரிவித்தார்.

நாட்டின் வளங்களைச் சூறையாடி நாட்டை அழிவுக்குக் கொண்டு வந்த மக்களை தற்போதைய ஜனாதிபதி பாதுகாத்து வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பயங்கரமான அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டுச் சேராது எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனாதிபதியும் ஒன்றிணைவதாக அரசாங்கத்திற்கு நட்பான சில ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்களுக்கு தாம் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியை முதலில் நியமித்த பொஹொட்டுவவை சேர்ந்த குழுவினரே வந்து அமைச்சர் பதவியை கேட்டதாகவும் தற்போது அது சூதாட்டமாக மாறியுள்ளதாகவும் நாடாகம் இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை இன்று சந்தித்த போதே எதிர்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...