follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1குருந்தூர் புனித தலத்தின் வரலாறு குறித்த சர்ச்சைக்குரிய வெளிப்பாடு

குருந்தூர் புனித தலத்தின் வரலாறு குறித்த சர்ச்சைக்குரிய வெளிப்பாடு

Published on

முல்லைத்தீவு குருந்தூர்புனிதத் தலமானது எந்த வகையிலும் கோவில் அல்ல என்றும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அது பௌத்த விகாரை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் சக்கரவர்த்தி கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“1964-ல் குருந்தூர் மலைக்கு முதன் முதலாகச் சென்றிருந்தபோது, ​​ஒரு சிறிய மரக்கன்று நட்ட தமிழ் ஒருவரைச் சந்தித்து, இந்த இடத்தில் புத்தர் பெரியவர் என்ற நம்பிக்கை உள்ளூர் மக்களிடையே இருப்பதாகச் சொன்னேன்.

சமீப நாட்களில் சில தமிழ் அரசியல் வாதிகள் கோயில் இருப்பதாக உலகுக்கு அறிவித்தனர்.

ஆனால் இது எந்த வகையிலும் கோயில் அல்ல. இது 100% பௌத்த ஆலயம் என்பதை அகழ்வாராய்ச்சியின் பின்னர் கல்வெட்டுகள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.

ஆனால், இந்தத் தவறான கருத்தை அடிப்படையாக வைத்து, இன்னும் சிலர் பெரும் அளவிலான சொத்துக்களை குடியிருப்பாளர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது. இது தவறு.

எனவே அனைவரும் நியாயமாகவும் ஒருமித்த கருத்துடனும் செயற்பட வேண்டும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...