follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"அரச சட்டத்தினை அனுசரிப்பதால் நாம் கோழையர்கள் அல்ல"

“அரச சட்டத்தினை அனுசரிப்பதால் நாம் கோழையர்கள் அல்ல”

Published on

குருந்தன்மலை விகாரை குறித்து பேசப்படும் நிலையில் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில், பலப்பிட்டியவில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் பதிலளித்தார்.

அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விதுர விக்கிரமநாயக்க பதிலளிக்கையில்;

“பௌத்த மதத்திற்கும் சாசனத்திற்கும் ஒரு சவால் இருப்பதைக் காணமுடிகிறது. இந்தச் சவால் இன்று நேற்றல்ல நீண்ட காலமாக உருவாக்கப்பட்டது.

எங்களை அடிக்கக்கூடிய எல்லா பக்கத்திலிருந்தும் அடிக்கிறார்கள். புத்த பெருமானின் போதனைகளின்படி நாம் செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது கூச்சம் அல்ல.

நாம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். நம் நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். புத்தரின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அரச சட்டம் மறுபக்கம்.

இவை இரண்டையும் மாற்றியமைக்க வேண்டும். நாம் அதை அனுசரித்துச் செல்லும்போது அதைக் கோழைத்தனம் என்று சிலர் நினைக்கிறார்கள். இல்லை. சரியான நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...