follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"அரச சட்டத்தினை அனுசரிப்பதால் நாம் கோழையர்கள் அல்ல"

“அரச சட்டத்தினை அனுசரிப்பதால் நாம் கோழையர்கள் அல்ல”

Published on

குருந்தன்மலை விகாரை குறித்து பேசப்படும் நிலையில் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில், பலப்பிட்டியவில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் பதிலளித்தார்.

அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விதுர விக்கிரமநாயக்க பதிலளிக்கையில்;

“பௌத்த மதத்திற்கும் சாசனத்திற்கும் ஒரு சவால் இருப்பதைக் காணமுடிகிறது. இந்தச் சவால் இன்று நேற்றல்ல நீண்ட காலமாக உருவாக்கப்பட்டது.

எங்களை அடிக்கக்கூடிய எல்லா பக்கத்திலிருந்தும் அடிக்கிறார்கள். புத்த பெருமானின் போதனைகளின்படி நாம் செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது கூச்சம் அல்ல.

நாம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். நம் நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். புத்தரின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அரச சட்டம் மறுபக்கம்.

இவை இரண்டையும் மாற்றியமைக்க வேண்டும். நாம் அதை அனுசரித்துச் செல்லும்போது அதைக் கோழைத்தனம் என்று சிலர் நினைக்கிறார்கள். இல்லை. சரியான நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...