தேசிய வைத்தியசாலையில் 3 கோடி ஆய்வக சோதனைகள் தனியாருக்கு

450

தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த ஆய்வு கூடத்தில் பரிசோதனைகளை நிறுத்துவதன் மூலம் மாதத்திற்கு சுமார் 300 இலட்சம் ரூபா பெறுமதியான பரிசோதனைகள் தனியாரிடம் செலுத்தப்படும் என அதன் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பரிந்துரைக்கப்படும் ஒரு பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் மூலம் 20 முதல் 30 வீதம் வரை கமிஷன் வழங்கப்படும் என மருத்துவ ஆய்வக அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் பிரிவினால் நோயாளிகள் தினமும் சுமார் 200 சிறுநீர் கலாச்சார பரிசோதனைகளை (யூரின் கல்ச்சர்) தனியார் துறையிலிருந்து செய்து கொள்ள வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் கூறினார்.

சிறுநீர் பரிசோதனை, சளி நுண்ணுயிரியல் பரிசோதனை, ஆண்டிபயாடிக் மருந்து உணர்திறன் சோதனை, ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சோதனை உள்ளிட்ட சுமார் பத்தாயிரம் பரிசோதனைகள் செய்ய வரும் நோயாளிகள் தனியார் ஆய்வகங்களுக்கு திருப்பி விடப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்தில் இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு குறைந்தது 3,000 ரூபாவுக்கும் அதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், பணப்பற்றாக்குறை காரணமாக பல நோயாளர்கள் தமக்கு பரிந்துரைக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளை பெறுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here