follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1"பசில் வலியுறுத்துவதால் மேலும் ஆறு அமைச்சுப் பதவிகள் வழங்கனும்.."

“பசில் வலியுறுத்துவதால் மேலும் ஆறு அமைச்சுப் பதவிகள் வழங்கனும்..”

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் அமைச்சரவை மாற்றத்துடன் ஆறு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ். எம். சந்திரசேன, சி. பி. ரத்நாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய மேஜர்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைச்சர் பதவி தேவையற்றது என நாமல் ராஜபக்ஷ ஏலவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான நிலையில் அதிக அமைச்சுப் பதவிகளை வழங்குவது பொருத்தமற்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான திரு. பசில் ராஜபக்ஷ.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...