follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கையின் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம் திறந்து வைப்பு

இலங்கையின் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம் திறந்து வைப்பு

Published on

கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் மூலமாக முதற்தடவையாக தாலிக்கு பொன் உருக்கும் புனித இடமொன்று பழமுத்து முத்துக்கருப்பன் தங்க நகைமாளிகையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிப்பாக ஆரம்ப காலத்தில் ஆண் பெண் பெயர்களை தலை ஓலையொன்றில் எழுதி அதை ஒரு மஞ்சள் கயிற்றினால் சுருட்டி பெண்கள் கழுத்தில் கட்டி வந்தனர். பின்னாளில் அது தாலி என அழைக்கப்பட்டது.

No description available.

இவ்வாறான பழக்கத்தில் ஆரம்பித்த தாலியை செய்யும் போது சரியான நாள், நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கவனிக்கும் அதேநேரம் ஆகம முறைப்படி தாலி செய்யும் வழிமுறையை எம்முன்னோர்கள் எமக்கு காட்டியுள்ளனர்.

பொன்னுருக்கலுக்காகவே பிரத்தியேகமான பொன்னுருக்கு மணவறையை பழ முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் அமைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலகுவாக அமைந்துள்ளது.

No description available.கொழும்பில் பொன்னுருக்கலுக்காகவே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதல் பொன்னுருக்கு மணவறை இதுவாகும்.

திருமணத்தில் பொன்னுருக்குதலுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொழும்பில் வீடுகளில் பொன்னுருக்குதல் செய்யப்படும் போது அதற்கான வசதிகளும் புனிதத் தன்மையும் குறைவாகவே காணப்படுகிறது.

இதைக் கருத்திற் கொண்டே பொன்னுருக்கு மணவறை பழ முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் அமைத்திருக்கிறது.

இப்போது திருமணத்திற்கு முன்பாக புகைப்படம் எடுக்கும் Pre-Shoot கலாச்சாரம் பரவலாக காணப்படுகிறது. இந்த Pre-Shoot நிகழ்வுகளையும் பொன்னுருக்குதலில் இருந்தே ஆரம்பிக்கலாம்.

பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸின் பிரத்தியேகமான பொன்னுருக்கு மணவறையின் திறப்பு விழாவை இன்று வெள்ளிக்கிழமை(16) முற்பகல் செட்டியார் தெருவில் அமைந்துள்ள எமது வர்த்தக நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. No description available.

தமிழ் சமூகத்தின் பாரம்பரிய விழுமியங்களை பாதுகாத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எமது பிரத்தியேகமான பொன்னுருக்கு மணவறையின் திறப்பு விழாவில் பலரும் கலந்து கொண்டனர்.

No description available.

இது குறித்து தங்கநகை மாளிகையின் பொது முகாமையாளர் காத்தமுத்து ஜெகதீஸ் கருத்துத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...