follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஆளும் கட்சியின் அமைச்சர்களை கொழும்பில் தங்குமாறு அறிவிப்பு

ஆளும் கட்சியின் அமைச்சர்களை கொழும்பில் தங்குமாறு அறிவிப்பு

Published on

எதிர்வரும் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் நீண்ட வார இறுதியில் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நீண்ட வார இறுதியில் ஜனாதிபதி செயலகத்தினால் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்படலாம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வார இறுதியில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹித அபேவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, சி.பி.ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட அமைச்சர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்களின் பதவிகள் மாறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரிடம் கேட்ட போது, ​​தனக்கும் இவ்வாறான செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் அது தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...