follow the truth

follow the truth

June, 7, 2024
HomeTOP1"நான் 100% ஒப்புக்கொள்கிறேன்" - சஜித்தின் கேள்விக்கு கெஹலிய பதில்

“நான் 100% ஒப்புக்கொள்கிறேன்” – சஜித்தின் கேள்விக்கு கெஹலிய பதில்

Published on

டெங்கு ஒழிப்பிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (20) இணைந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

டெங்கு மீண்டும் ஒரு தீவிர தொற்றுநோயாக மாறியுள்ளதாகவும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இவர்களின் வேலைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளிக்கையில்;

“.. எதிர்க்கட்சித் தலைவருடன் நான் 100% உடன்படுகிறேன். இவர்கள் 2016 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழு. இவர்களுக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. ஆனால், இதுவரை எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கு வேலை வழங்கினால் அவர்களும் உறுதி செய்யப்பட வேண்டும் என மூன்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு எழுநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைக்கவுள்ளோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை முப்படை முஸ்லிம் வீரர்களுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கிய சவூதி

வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள...

நாளை முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

நாளை (08) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக...

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்

இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு...