follow the truth

follow the truth

May, 15, 2024
HomeTOP1"நான் 100% ஒப்புக்கொள்கிறேன்" - சஜித்தின் கேள்விக்கு கெஹலிய பதில்

“நான் 100% ஒப்புக்கொள்கிறேன்” – சஜித்தின் கேள்விக்கு கெஹலிய பதில்

Published on

டெங்கு ஒழிப்பிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (20) இணைந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

டெங்கு மீண்டும் ஒரு தீவிர தொற்றுநோயாக மாறியுள்ளதாகவும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இவர்களின் வேலைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளிக்கையில்;

“.. எதிர்க்கட்சித் தலைவருடன் நான் 100% உடன்படுகிறேன். இவர்கள் 2016 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழு. இவர்களுக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. ஆனால், இதுவரை எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கு வேலை வழங்கினால் அவர்களும் உறுதி செய்யப்பட வேண்டும் என மூன்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு எழுநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைக்கவுள்ளோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...