follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1மேல்மாகாண பாடசாலைகளின் சீருடை மாறுகிறது

மேல்மாகாண பாடசாலைகளின் சீருடை மாறுகிறது

Published on

டெங்கு காய்ச்சலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மேல்மாகாண பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

“மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடைக்கு மேலதிகமாக உடலை மறைக்கும் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வருமாறும் வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து வருமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஆலோசனைகளை அனுப்பியுள்ளோம்.

அதற்கு ஆளுநரின் ஒப்புதலும், தலைமைச் செயலாளரின் ஒப்புதலும், கல்வித்துறை செயலாளரின் ஒப்புதலும் உள்ளதாகத் தெரிய வந்தது. நாங்கள் அதை ஒரு நல்ல வேலையாக பார்க்கிறோம். ஆபத்து நீங்கும் வரை இதனை செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்..”

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...