follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1“சமீபத்தில் நான் கடைக்கு செல்லவில்லை” – அரிசி விவகாரத்தில் மஹிந்த – சஜித் மோதல்

“சமீபத்தில் நான் கடைக்கு செல்லவில்லை” – அரிசி விவகாரத்தில் மஹிந்த – சஜித் மோதல்

Published on

அரிசி விலை குறித்த தகவல் தெரியாததால், கடைக்குச் சென்று அரிசியின் சரியான விலையை அறிந்து கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மஹிந்த அமரவீர தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“நீங்கள் ஹம்பாந்தோட்டையில் இருந்தீர்கள். அரிசி 220க்கு விற்கப்படுகிறது என்று சொன்னீர்கள். நீங்கள் சமீபத்தில் கடைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். லுனுகம்வெஹர பகுதியில் 125 ஆக பதிவாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பணியாற்றிய அனைவரும் சந்தைக்குச் சென்றனர். சென்று விலைகளைக் கண்டறியவும். நீங்களும் செல்லுங்கள். இங்கே யாரும் சொல்வதைச் சொல்லாதீர்கள். பாஸ்மதி கீரி சம்பாவை பற்றி யோசித்து பேசாதீர்கள்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நாடு மற்றும் கெக்குலு அரிசியை உண்கின்றனர். அதுவும் 200க்கு மேல் விற்கவில்லை.

எம்ஓபி உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. யாராவது கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன். பொலன்னறுவையில் யூரியாவில் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. நாடு முழுவதும் யூரியா வேலைத்திட்டம் ஒழுங்காக செல்கிறது. மண் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக எம்ஓபி உரம் உள்ளது. சில அதிகாரிகள் அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக உரத்தட்டுப்பாடுகளை உருவாக்குகின்றனர். அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...