follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1“சமீபத்தில் நான் கடைக்கு செல்லவில்லை” – அரிசி விவகாரத்தில் மஹிந்த – சஜித் மோதல்

“சமீபத்தில் நான் கடைக்கு செல்லவில்லை” – அரிசி விவகாரத்தில் மஹிந்த – சஜித் மோதல்

Published on

அரிசி விலை குறித்த தகவல் தெரியாததால், கடைக்குச் சென்று அரிசியின் சரியான விலையை அறிந்து கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மஹிந்த அமரவீர தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“நீங்கள் ஹம்பாந்தோட்டையில் இருந்தீர்கள். அரிசி 220க்கு விற்கப்படுகிறது என்று சொன்னீர்கள். நீங்கள் சமீபத்தில் கடைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். லுனுகம்வெஹர பகுதியில் 125 ஆக பதிவாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பணியாற்றிய அனைவரும் சந்தைக்குச் சென்றனர். சென்று விலைகளைக் கண்டறியவும். நீங்களும் செல்லுங்கள். இங்கே யாரும் சொல்வதைச் சொல்லாதீர்கள். பாஸ்மதி கீரி சம்பாவை பற்றி யோசித்து பேசாதீர்கள்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நாடு மற்றும் கெக்குலு அரிசியை உண்கின்றனர். அதுவும் 200க்கு மேல் விற்கவில்லை.

எம்ஓபி உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. யாராவது கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன். பொலன்னறுவையில் யூரியாவில் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. நாடு முழுவதும் யூரியா வேலைத்திட்டம் ஒழுங்காக செல்கிறது. மண் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக எம்ஓபி உரம் உள்ளது. சில அதிகாரிகள் அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக உரத்தட்டுப்பாடுகளை உருவாக்குகின்றனர். அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..” என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

யுக்ரைனில் போருக்காக சென்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ரஷ்யா மற்றும் யுக்ரைனில் போருக்காக சென்றுள்ள இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் இன்று(14) கொழும்பில் உள்ள...

புற்று நோய்க்கு வழிவகுக்கும் பூஞ்சை மசாலாப் பொருட்களை சாப்பிட வேண்டாம்

அதிகளவில் புற்றுநோயை உண்டாக்கும் பூஞ்சை காணப்படுவதால், சந்தையில் இருந்து வாங்கப்படும் அல்லது வீட்டில் சேமித்து வைக்கப்படும் தானியங்கள் மற்றும்...

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு 31ஆம் திகதி விசாரணைக்கு

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய...