follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1நினைவுப் பலகையில் "பெயர் இல்லை" என ஆட்டம்காட்டிய அமைச்சர்

நினைவுப் பலகையில் “பெயர் இல்லை” என ஆட்டம்காட்டிய அமைச்சர்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ள கம்பஹா புதிய மாவட்ட செயலக கட்டிடத்தின் நினைவுப் பலகை மற்றும் அழைப்பிதழ் காரணமாக அரசியல் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

நினைவுப் பலகை மற்றும் கட்டிட திறப்பு விழா அழைப்பிதழில் ஜனாதிபதியின் பெயரை மாத்திரம் குறிப்பிடுமாறு கம்பஹா மாவட்ட செயலாளருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் அறிந்த கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அமைச்சர் ஒருவர் கடந்த புதன்கிழமை திடீரென பொது நிர்வாக அமைச்சுக்கு வந்து நினைவுப் பலகையில் தனது பெயரைச் சூட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார்.

அதனை உடனடியாக செய்வதற்கு அமைச்சு கடுமையாக உழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது மாடிகளைக் கொண்ட இந்த கம்பஹா புதிய மாவட்டச் செயலகக் கட்டிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

இக்கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இம்மாத இறுதியில் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் விபத்தில் உயிரிழந்த தலைமைகளின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்

ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி...

இலங்கை வருகிறார் எலொன் மஸ்க்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த...

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்...