follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்ஹொண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த மோதலில் 41 பேர் பலி

ஹொண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த மோதலில் 41 பேர் பலி

Published on

ஹொண்டுராஸ் மாகாணத்தில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் நேற்று (20) இடம்பெற்ற மோதலில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ஒரு கும்பல் சிறை அறைக்கு தீ வைத்ததால் இது நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பெரும்பாலான இறப்புகள் தீயினால் ஏற்பட்டவை, ஆனால் சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இறந்தவர்கள் அனைவரும் கைதிகளா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொண்டுராஸ் துணை பாதுகாப்பு அமைச்சரும் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...