ஹொண்டுராஸ் மாகாணத்தில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் நேற்று (20) இடம்பெற்ற மோதலில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ஒரு கும்பல் சிறை அறைக்கு தீ வைத்ததால் இது நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் பெரும்பாலான இறப்புகள் தீயினால் ஏற்பட்டவை, ஆனால் சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இறந்தவர்கள் அனைவரும் கைதிகளா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொண்டுராஸ் துணை பாதுகாப்பு அமைச்சரும் அவசர நிலையை அறிவித்துள்ளார்.