சீனாவில் வெடிப்பு – ஜனாதிபதி அவசர உத்தரவு

933

வடமேற்கு சீன நகரமான யின்சுவானில் (Yinchuan) உள்ள ஒரு உணவகத்தில் எரிவாயு கசிவு காரணமாக வெடித்ததில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச ஊடகம் இன்று(22) தெரிவித்துள்ளது.

சீனாவில் பார்பிக்யூ உணவகத்தில் எரிவாயு தொட்டி வெடித்து சிதறியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இதுபோன்ற இடங்களுக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போதுள்ள நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் உடனடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here