follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1"அமைச்சர் பதவி தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும்"

“அமைச்சர் பதவி தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும்”

Published on

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொடுக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வைத்தியசாலைகளில் சர்ச்சையில் இருக்கும் மயக்க மருந்து தொடர்பான நிலைமையை விளக்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“இந்த நேரத்தில் அறிவிப்பதற்கு மிகவும் வருந்துகிறேன்.. நீதிமன்றம் எடுத்த சில முடிவுகளால் எங்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.”

“இன்னொரு காரணம் பணப் பிரச்சினை.”

“இதைச் சமாளிக்க முடியாவிட்டால், நான் அதை இந்த சபைக்கு அறிவிப்பேன்.”

“நான் முடிவெடுத்ததால்.. அமைச்சர் என்ற முறையில், இதுபோன்ற குறையை என்னால் ஈடு செய்ய முடியவில்லை என்றால், இனி எந்த பதவியையும் வகிக்கும் நம்பிக்கை இல்லை.”

“ஏனெனில் இது சமுதாயத்திற்கும் இந்த சேவைக்கும் ஒரு பெரிய குறைபாடு. காரணங்கள் எதுவாக இருந்தாலும், அந்த குறைபாடுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...