follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு 

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு 

Published on

நாட்டின் பிரதான அரசாங்க வைத்தியசாலையான காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்நிலையால் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பராமரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு 556 வைத்தியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது 460 வைத்தியர்கள் உள்ளதாகவும், இந்த வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் யு.எம். ரங்கவிடம் வினவியபோது;

தற்போது சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு உள்ளதாகவும், சுகாதார அமைச்சு போதிய வைத்தியர்களை வழங்காத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கோரிய எண்ணிக்கையிலான மருத்துவர்களை அமைச்சகம் இதுவரை வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...