follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அரச அலுவலகங்களில் அதிகார நாற்காலிகளை நிரப்ப நடவடிக்கை

அரச அலுவலகங்களில் அதிகார நாற்காலிகளை நிரப்ப நடவடிக்கை

Published on

தற்போது அமைச்சுகள், மாகாண சபைகள், ஆணைக்குழுக்கள் மற்றும் மாவட்டச் செயலக அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் புதுப்பித்த தகவல்களை வழங்குமாறு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (பொது நிர்வாகம்) பி.டபிள்யூ. ராஜபக்ஷ இது குறித்து அமைச்சுச் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், அனைத்து ஆணைக்குழு செயலாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகத்தர்களின் பணி நியமனம், இடமாற்றம் மற்றும் ஆட்சேர்ப்பு ஆகிய செயற்பாடுகளை மிகவும் உகந்த முறையில் மேற்கொள்ள இந்தத் தகவல்கள் அவசியமானது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூலை 30ஆம் திகதிக்கு முன்னர், அரச தழுவிய சேவைப் பதவிகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தகவல்களை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சின் எல்லைக்குட்பட்ட திணைக்களங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் தகவல்கள் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...