follow the truth

follow the truth

May, 23, 2024
HomeTOP1மேல்மாகாண மக்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்

மேல்மாகாண மக்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்

Published on

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட தூய்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீட்டிலேயே தங்கி தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான டொக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு லார்வா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். காலநிலைக்கு ஏற்ப டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்தாவிடின் டெங்கு கொவிட் போன்ற ஆபத்தான நோயாக மாறும் என்றும் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

கொரிய மொழிப் புலமை பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளுக்காக நடைபெற்ற கொரிய மொழிப் புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் 3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக...

LPL போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

எதிர்வரும் LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். எல்பிஎல் போட்டியின் நேர்மை...

மீன் விலை அதிகரிக்கலாம்

அடுத்த மாதமளவில் மீன்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம்...