திருகோணமலையில் மான்களை பாதுகாக்க கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

420

திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திருகோணமலை நகர சபையும் பட்டினமும், சூழலும் பிரதேச செயலகமும் இணைந்து திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர், திருகோணமலை நகர சபை செயலாளர், திருகோணமலை பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கடந்த காலங்களில் திருகோணமலையில் 20-க்கும் மேற்பட்ட மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மான்களின் பாதுகாப்பு, உணவு போன்ற விடயங்களைக் கவனிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் அதிகமான மான்களைக் கொண்ட இடமாக திருகோணமலை திகழும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here