follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் வெளியே விற்கத்தடை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் வெளியே விற்கத்தடை

Published on

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பிற கடைகளுக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், வெளியில் விற்கும் பேக்கரிகளுக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும் ராஜ்ய வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ நிறுவனங்களின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி முட்டையை அவரது சகோதரரின் கடையில் விற்பனைக்கு வழங்கியதன் காரணமாக பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான மற்றொரு காரணம் உள்ளூர் முட்டை விலையை குறைப்பதாகவும், உள்ளூர் முட்டைகளின் தட்டுப்பாடு நீங்கி விலை சீராகும் வரை இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என்றும் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய தலைவர், தினமும் பத்து இலட்சம் முட்டைகள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...