சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

363

சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சூதாட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை முறையாக வசூலித்தல், சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுத்தல், சூதாட்ட விளையாட்டுகளால் தனிநபர்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன்படி, அனைத்து சூதாட்டதாரர்களை பாதிக்கும் வகையில் சூதாட்ட ரெகுலேட்டரி அதாரிட்டி எனப்படும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய பின்னடைவு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here