ராஜகிரியில் ஒரு சாலைக்கு பூட்டு

463

ராஜகிரிய பிரதேசத்தில் வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இன்று (30) மாலை 5 மணி முதல் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை வெலிக்கடை பொலிஸ் பிரிவில் ராஜகிரிய வீதி, மதின்னாகொட சந்தி தற்காலிகமாக மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதால், குறித்த காலப்பகுதியில், வெலிக்கடை சந்தி, மொரகஸ்முல்ல சந்தி மற்றும் ராஜகிரிய வீதியில் மதின்னாகொட சந்தி ஆகியவற்றிலிருந்து வீதி மூடப்படும்.

இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here