follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சொந்த நாட்டிற்குச் சென்ற முத்துவுக்கு பசி அதிகமாம்

சொந்த நாட்டிற்குச் சென்ற முத்துவுக்கு பசி அதிகமாம்

Published on

தாய்லாந்து சென்ற முத்து ராஜா அல்லது ‘சக்சுரின்’ யானை வளர்ப்பாளர்களுடன் லாம்பாங் மாகாணத்தில் உள்ள யானை பராமரிப்பு மையத்திற்கு தனது பயணத்தின் போது 5-10 நிமிடங்களுக்கு ஒருமுறை உணவுக்காக அழுததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யானை பாகர்கள் ‘சக்சுரின்’ வாழை காய்கள், கரும்பு, புல் ஆகியவற்றை கொடுத்தபோது, ​​அவர் அழுகையை நிறுத்தி சாப்பிட்டதாக தாய்லாந்து ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘சக்சுரின்’, காற்றால் அடித்துச் செல்லப்பட்ட மரங்களால் சூழப்பட்ட பாதுகாப்புப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலைக்கு அவரைப் பழக்கப்படுத்துவதற்காக ‘சக்சுரின்’ கால் கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை பல இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அறிக்கைகள் இன்னும் சில தினங்களில் கிடைக்கப்பெறும் எனவும் நிலையத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் தெரிவித்துள்ளார்.

30 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு மக்கள் ‘சக்சுரின்’ சந்திக்க முடியும் என்று மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...