இலங்கை – வியட்நாம் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றம் தொடர்பான அதிகாரிகள் குழுவை தெரிவு செய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா ஆகியோர் சங்கத்தின் ஏனைய அதிகாரிகளாக இருந்தனர்.
எம் உதயகுமார், காமினி வலேபொட, மொஹமட் முஸம்மில் மற்றும் கருணாதாச கொடிதுவக்கு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் அவர்களும் கலந்து கொண்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.