follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்ஒடிசா ரயில் விபத்து - மூவர் கைது

ஒடிசா ரயில் விபத்து – மூவர் கைது

Published on

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த மாதம் நடந்த பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே ஊழியர்கள் 3 பேரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சமிஞ்சை பிரிவில் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குற்றவியல் கொலை மற்றும் சாட்சியங்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரின் நடவடிக்கையே விபத்துக்கு வழிவகுக்கும் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், சமிஞ்சை துறை ஊழியர்களின் தவறுகளே இதற்கு காரணம் என கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...