ஒடிசா ரயில் விபத்து – மூவர் கைது

192

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த மாதம் நடந்த பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே ஊழியர்கள் 3 பேரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சமிஞ்சை பிரிவில் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குற்றவியல் கொலை மற்றும் சாட்சியங்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரின் நடவடிக்கையே விபத்துக்கு வழிவகுக்கும் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், சமிஞ்சை துறை ஊழியர்களின் தவறுகளே இதற்கு காரணம் என கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here