முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், ஜனாதிபதி அவருக்கு மூன்று மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும் போது மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும், ஆனால் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறும் நாளில் அவ்வாறான அணிவகுப்பு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாளை (09) அல்லது நாளை மறுதினம் (10) மீண்டும் பணிக்கு சமூகமளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.