follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மனம்பிடிய விபத்து - தொடர்ந்தும் சடலங்களை தேடும் பணியில் கடற்படையினர்

மனம்பிடிய விபத்து – தொடர்ந்தும் சடலங்களை தேடும் பணியில் கடற்படையினர்

Published on

பொலன்னறுவை, மனம்பிடிய கொட்டாலேய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 17 வயது சிறுவனும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சடலங்கள் உள்ளதா என்பதை கண்டறிய கடற்படையினரின் உதவியை நாட வேண்டியுள்ளதாகவும், இப்பேருந்து பாலத்தின் மீது 75% தூரம் பயணித்ததாகவும் அதன் பின்னர் ஆற்றில் கவிழ்ந்ததாகவும் பாலத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் பேருந்து அதிவேகமாக இயங்கியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

பேருந்து அதிவேகமாக வந்ததா அல்லது பாலத்தில் டயர் வெடித்ததா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...