follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1தேஷபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கடும் எதிர்ப்பாம்

தேஷபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கடும் எதிர்ப்பாம்

Published on

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்படாததால், சி.டி.விக்ரமசிங்கவுக்கு அந்தப் பதவியில் பணியாற்றுவதற்கு மூன்று மாதங்களுக்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதில் தமக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி கடுமையாக கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூன் 25ம் திகதி, சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் முடிவடைந்து, பொலிஸ் மா அதிபர் பதவி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு வெற்றிடமாகவே இருந்தது.

புதிய பொலிஸ் மா அதிபராக அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி இதுவரை எந்த பெயரையும் முன்மொழியவில்லை என்ற நிலையில் சி.டி. விக்கிரமரத்னவை தொடர்ந்தும் சேவையில் இருக்கும் வகையில் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...