follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேஷபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கடும் எதிர்ப்பாம்

தேஷபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கடும் எதிர்ப்பாம்

Published on

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்படாததால், சி.டி.விக்ரமசிங்கவுக்கு அந்தப் பதவியில் பணியாற்றுவதற்கு மூன்று மாதங்களுக்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதில் தமக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி கடுமையாக கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூன் 25ம் திகதி, சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் முடிவடைந்து, பொலிஸ் மா அதிபர் பதவி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு வெற்றிடமாகவே இருந்தது.

புதிய பொலிஸ் மா அதிபராக அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி இதுவரை எந்த பெயரையும் முன்மொழியவில்லை என்ற நிலையில் சி.டி. விக்கிரமரத்னவை தொடர்ந்தும் சேவையில் இருக்கும் வகையில் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...