follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1அஸ்வெசும முறையீடுகளின் பரிசீலனை ஆரம்பம்

அஸ்வெசும முறையீடுகளின் பரிசீலனை ஆரம்பம்

Published on

அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 10ம் திகதியுடன் முடிவடைந்தது.

அதன்படி, இந்த கொடுப்பனவுகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 968,000 மேன்முறையீடுகள் மற்றும் 17,500 ஆட்சேபனைகளை பரிசீலிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பரிசீலிப்பார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கொடுப்பனவுகள் தேவைப்படும் அனைத்து தரப்பினரையும் இனங்கண்டு, அவர்களை ‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவித் திட்டத்தில் உள்ளடக்குவது வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்துகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...